Thursday, July 24, 2008

சாலையை சீரமைக்காவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் மேலச்செல்வனூர் பொது மக்கள் அறிவிப்பு

சாலையை சீரமைக்காவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி வீடுகள்தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் மேலச்செல்வனூர் பொது மக்கள் அறிவிப்பு


முதுகுளத்தூர், ஜுலை.25-

மேலச்செல்வனூர் பகு தியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா விட்டால் ஆகஸ்டு 15-ந் தேதி வீடுகள் தோறும் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்து வோம் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துள்ள னர்.

சாலை வசதி

கடலாடி ïனியன் மேலச் செல்வனூர் ஊராட்சி தலை வர் கோபால கிருஷ்ணன் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடலாடி ஊராட்சி ஒன்றி யம் மேலச்செல்வனூர் ஊராட்சி யில் ஆலங்குளம், எம்.எஸ். புதுக்குடியிருப்பு, தேரங்குளம், கடையக்குளம், கண்டங்கனி, பாப்பாகுளம், பல்லனேந்தல், எஸ்.பாடுவனேந்தல் உள்பட 9 கிராமங்கள் உள்ளன.

மேலச்செல்வனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வரு கின்றனர். ஆலங்குளம், எம். எஸ்.புதுக்குடியிருப்பு சாலை மிக மோசமாக உள்ளது. இத னால் மாணவ-மாணவிக ளும், பொது மக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கறுப்பு கொடி

இதுகுறித்து அமைச்சரிட மும், கலெக்டரிடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே சாலையை புதுப்பித்து பஸ் இயக்க வேண்டும். பொது மக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்டு 15-ந்தேதி இந்த ஊராட்சியை சேர்ந்த அனைத்து வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றி போராட் டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: