Thursday, July 24, 2008

இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மயில்கள்

இறைச்சிக்காக வேட்டையாடப்படும் மயில்கள்

முதுகுளத்தூர் பகுதியில் இறைச்சிக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதால் மயில் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது காடுகள் அழிந்து வருவதாலும், சில சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வேட்டையாடப்படுவதாலும், மயில்கள் காட்டை விட்டு மக்கள் வசிக்கும் இடங்களின் அருகே நடமாடி வருகின்றன.

வயல்வெளி, கண்மாய், குளம் இவற்றில் உலாவும் மயில்கள் தோகையை விரித்து ஆடுவதால் அதன் அழகை இப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் அரக்க குணம் கொண்ட சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவது வேதனைக்குரியது. இதனை வனத்துறையினர் கண்டு கொள்வது இல்லை.


பறவைகள், விலங்கினங்களைக் காக்க தேசிய அளவில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பினர் இதுபோன்ற செயலகளை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0725-peacocks-also-join-in-rare-bird-list.html

No comments: