முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவசாயி வீடு சூறை
முதுகுளத்தூர் அருகே தண்ணீர் பாய்ச்சியதற்கு பணம் தராததால் விவ சாயி வீட்டை சூறையாடி யவரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி
முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவ ரது மகன் பால்ச்சாமி(வயது 52). அதே ஊரைச்சேர்ந்தவர் வேலு மகன் ராமையா (65). இவர் தனக்கு சொந்தமான கிணற்றில் இருந்து அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டார் மூலம் வாடகைக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.
இந்நிலையில் இவரிடம் பால்ச்சாமி தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சும்படி கேட் டுக்கொண்டதன் பேரில் அவ ரது வயலுக்கு மோட்டார் மூலம் ராமையா தண்ணீர் பாய்ச்சினார். ஆனால் இதற் கான வாடகை பணத்தை பால்ச்சாமி கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்த டித்து வந்ததாக கூறப்படு கிறது.
வீடு சூÛ
இதனால் ஆத்திரமடைந்த ராமையா அவரது வீட்டிற்கு சென்று பால்ச்சாமியிடம் தகராறு செய்தார். அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடிய ராமையா, அரிவாளை எடுத் துக்கொண்டு பால்ச்சாமியை துரத்தினாராம்.
இதுகுறித்து அவர் முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் பாலமுருகன், சப்- இன்ஸ் பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராமையாவை கைது செய்த னர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment