Wednesday, August 6, 2008

நாளை முதல் முதுகுளத்தூர் தவிர 25 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாளை முதல் 25 இடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்


ராமநாதபுரம், ஆக. 6: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. நாளை (6ம் தேதி) கடலாடி பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், 10ம் தேதியன்று பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12ம் தேதியன்று பெருங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், 13ம் தேதி திருப்புல்லாணி பஞ்.யூனியன் பள்ளியில் நடக்கிறது.

வருகிற 14ம் தேதி ராமநாதபுரம் ஆர்சி சர்ச் வளாகத்திலும், 16ம் தேதி பரமக்குடி ஆயிரவைசிய பள்ளியிலும், 17ல் தேவிப்பட்டினம் முஸ்லிம் சட்ட கட்டடத்திலும் நடக்கவுள்ளது.

வருகிற 18ம் தேதியன்று திருஉத்திரகோசமங்கை யாதவ சங்க கட்டடத்திலும், செவ்வூர் பஞ். யூனியன் பள்ளியில் நடக்கிறது. 19ம் தேதி பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 20ம் தேதி ராமநாதபுரத்தில் பஞ். யூனியன் பள்ளியிலும், 22ம் தேதி மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி தங்கச்சிமடம் பஞ். யூனியன் பள்ளி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

வருகிற 25ம் தேதியன்று போகலூர் பஞ். யூனியன் பள்ளியிலும், 28ம் தேதி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29ம் தேதி ஆண்டாவூரணி ஆர்சி சர்ச் வளாகத்திலும், 31ம் தேதி கமுதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பேரையூர் பஞ். யூனியன் பள்ளி, பரமக்குடி நகராட்சி பள்ளியிலும் நடக்கவுள்ளது.

No comments: