Sunday, December 21, 2008

டெல்லியில் இந்திய தூதர்கள் மாநாடு

டெல்லியில் இந்திய தூதர்கள் மாநாடு
நாளை தொடங்குகிறது


புதுடெல்லி, டிச.21-

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய நேரடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதர்களின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார். இரண்டாவது நாளான 23-ந் தேதி அன்று பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்ற இருக்கிறார். `தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்' என்பது குறித்து இந்திய தூதர்களுக்கு இருவரும் விளக்கி கூறுவார்கள்.

இது தவிர மும்பை தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் போன்றவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

No comments: