Saturday, August 16, 2008

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்

பிரதமரின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்




* கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு கவனம்

* 6000 புதிய உயர்தர மாதிரி பள்ளிகள் அமைப்பு

* ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தது ஒரு பள்ளி

* பின்தங்கிய மாவட்டங்களில் 30 புதிய பல்கலைக்கழகங்கள், 8 புதிய இந்திய தொழில்நுட்பப் பயிலகங்கள், 7 புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 10 புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப பயிலகங்கள், 5 புதிய இந்திய அறிவியல் கழகங்கள், இரண்டு திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைப் பள்ளிகள், 10 தேசிய தொழில்நுட்ப பயிலகங்கள் மற்றும் 1000 புதிய பாலிடெக்னிக்குகள் அமைக்கப்படுகின்றன.

* வேளாண்துறைக்கு அளிக்கப்பட்ட கடனுதவி கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 81 ஆயிரம் கோடியிலிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

நிலவுக்கு இந்த ஆண்டில் இந்தியாவின் விண்வெளி ஓடம் "சந்திராயன்'

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உறுதிமிக்க நடவடிக்கைகள்.

* அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக வளர்ந்த நாடுகளுடன் பேச்சு

* தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், குடிமக்கள் அமைப்புகள், சமூக, மதத்தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.

* ஜம்மு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த தொடர்ந்து அயராது முயற்சி

* தீவிரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் இந்தியா, பாகிஸ்தான் மக்களின் விரோதிகள்.

No comments: