கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்
சிதம்பரம், ஆக. 21: பாலிடெக்னிக்கில் பயிலும் ஏழை மாணவரது படிப்பு செலவுக்கு சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவர்கள் வசூலித்த ரூ.3400-ஐ அளித்துள்ளனர்.
சிதம்பரம் குஞ்சமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆர்.கலியபெருமாள் மகன் கே.ராஜா. இந்த ஈரோடு நந்தா பாலிடெக்னிக்கில் கல்வி பயின்று வருகிறார்.
இவரின் படிப்புக்காக, சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் ரூ.3400-ஐ வசூலித்தனர்.
இந்த உதவித் தொகையை அவரது பெற்றோரிடம் பள்ளித் தாளாளர் இரா.செந்தில்குமார் முன்னிலையில் தமிழாசிரியர் கே.நடனகுஞ்சிதபாதம் திங்கள்கிழமை அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment