Friday, August 22, 2008

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்


சிதம்பரம், ஆக. 21: பாலிடெக்னிக்கில் பயிலும் ஏழை மாணவரது படிப்பு செலவுக்கு சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவர்கள் வசூலித்த ரூ.3400-ஐ அளித்துள்ளனர்.

சிதம்பரம் குஞ்சமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆர்.கலியபெருமாள் மகன் கே.ராஜா. இந்த ஈரோடு நந்தா பாலிடெக்னிக்கில் கல்வி பயின்று வருகிறார்.

இவரின் படிப்புக்காக, சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் ரூ.3400-ஐ வசூலித்தனர்.

இந்த உதவித் தொகையை அவரது பெற்றோரிடம் பள்ளித் தாளாளர் இரா.செந்தில்குமார் முன்னிலையில் தமிழாசிரியர் கே.நடனகுஞ்சிதபாதம் திங்கள்கிழமை அளித்தார்.

No comments: