Friday, August 22, 2008

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


நாகப்பட்டினம், ஆக. 21: தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகைப் பெற தகுதியான கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் 2008-09-ம் ஆண்டுக்குக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று; பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்; எந்த உதவித் தொகையும் பெறாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு, முதலாம் ஆண்டு கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், டிப்ளமோ முடித்து 2-ம் ஆண்டு பொறியியல் பயிலுபவர்கள், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

நிகழாண்டில், 400 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

முதலாம் ஆண்டு பட்டயப்படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 4 ஆயிரம், முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்புக்கு ரூ. 4,500, முதலாம் ஆண்டு தொழில் நுட்பப் படிப்புக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதிகள்: சுமார் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

உறைமேலிட்ட கவரில் சுய முகவரியைத் தெளிவாக எழுதி (உறை அளவு 22.5 செ.மீ 1 செ.மீ), ரூ. 10-க்கான தபால் தலை ஒட்டி, "கெüரவச் செயலர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராஜா அண்ணாமலை பில்டிங், இணைப்புக் கட்டடம் 2-வது தளம், 18/3 ருக்மணி லெட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை-8' என்ற முகவரிக்கு வரும் அக். 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: