Saturday, August 9, 2008

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் ஆக 9.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2008 மாதத்திற்க்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.8.08 அன்று

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக்கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் தெரிவிக்கிறார்.

No comments: