Thursday, June 11, 2009

முதுகுளத்தூர் தாலுகாவில் ஜமாபந்தி நாளை தொடக்கம்

முதுகுளத்தூர் தாலுகாவில் ஜமாபந்தி நாளை தொடக்கம்

www.mudukulathur.com


முதுகுளத்தூர், ஜுன்.11-

முதுகுளத்தூர் தாலுகாவில் வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. 2-ம் பிரிவாக நாளை முதல் 23-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.

ஜமாபந்தி

முதுகுளத்தூர் தாலுகாவில் 1418ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயபால் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 2-ம் பிரிவாக நாளை (12-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை ஜமாபந்தி கணக்குகள் தணிக்கை செய்யப்பட உள்ளன.

கீழத்தூவல்

இதன்படி நாளை (12-ந்தேதி) முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டத்தை சேர்ந்த மேல முதுகுளத்தூர், கீழ முதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர், ஆணைசேரி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 16-ந் தேதி முதுகுளத்தூர் தெற்கு உள்வட்டத்தை சேர்ந்த சித்திரங்குடி, சோனைப்பிரியான்கோட்டை, ஏனாதி, கண்டிலான், இளஞ்செம்பூர், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, சேந்தனேரி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல 17-ந்தேதி கீழத்தூவல் உள்வட்டத்தை சேர்ந்த கீழத்தூவல், மேலத்தூவல், விளங்குளத்தூர், வெங்கலக்குறிச்சி, சுவாத்தான், செல்லூர், திருவரங்கம், கொளுந்துரை ஆகிய கிராமங்களுக்கும், 18-ந்தேதி மேலக்கொடுமலூர் உள்வட்டத்தை சேர்ந்த மேலக்கொடுமலூர், சடைக்கனேந்தல், தட்டானேந்தல், கூத்தாடியேந்தல், கீழக்கொடுமலூர், விக்கிரமபாண்டியபுரம், சாத்தனூர், கீழக்குளம், மேலக்குளம், மேற்கு கொட்டகுடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் தணிக்கை செய்யப்படுகிறது.

கோரிக்கைகள்

19-ந் தேதி தேரிருவேலி உள்வட்டத்தை சேர்ந்த தேரிருவேலி, பூசேரி, தாளியாரேந்தல், வளநாடு, இளங்காக்கூர், உலைïர், ஆதங்கொத்தங்குடி ஆகிய கிராமங்களுக்கும், 23-ந்தேதி காக்கூர் உள்வட்டத்தை சேர்ந்த காக்கூர், புளியங்குடி, பொசுக்குடி, கருமல், குமாரக்குறிச்சி, பிரபுக்களூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.

எனவே முதுகுளத்தூர் பகுதி பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தாலுகா அலுவலகத்தில் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என்று கலெக்டர் வாசுகி தெரிவித்தார்.

No comments: