Thursday, June 11, 2009

முதுகுளத்தூர் தாலுகாவில் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் மெத்தன போக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

முதுகுளத்தூர் தாலுகாவில் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் மெத்தன போக்கு மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

விண்ணப்பம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் ஏராளமானோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்காமல் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை நம்பியே காலம் தள்ளும் இந்த கிராம மக்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டுகளின் அவசியம் பற்றி தெரியாமலே உள்ளது. அப்படி ஏதேனும் தகவலறிந்து குடும்ப அட்டை பெற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் அங்கே இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் ஊழியர்கள். பாமர மக்கள் செய்வதறியாமல் வருடக் கணக்கில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ராம்நாதபுரத்தில் இருந்து இன்னும் பிரிண்ட் ஆகி வரவில்லை. ஆகவே கால தாமதம் ஆகிறது என்ற மலுப்பலான பதிலே பெரும்பாலும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யாரும் முறையாக ரேசன் கார்டுகள் வழங்கப்படுகிறதா என்று கண்காணிப்பதில்லை.


ஆகவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பாமர மக்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி : தினபூமி

No comments: