Thursday, June 11, 2009

இந்திய விமானப்படைக்கு இளைஞர்கள் தேர்வு

இந்திய விமானப்படைக்கு இளைஞர்கள் தேர்வு

ராமநாதபுரம்,ஜுன்.11-

இந்திய விமான படையில் பணியாற்ற இளைஞர்கள் தேர்வு வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

விமானப்படை

இந்திய விமான படையில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவுகளில் பணியாற்ற 17 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வருகிற ஜுலை 24 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (ஜுலை) 24-ந் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை தொழில் நுட்பம் அல்லாத பிரிவுக்கு (குரூப் `ஒய்`) தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்பவர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்ïட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வி தகுதி

இதேபோல 26-ந் தேதி தொழில் நுட்ப பிரிவுக்கு (குரூப் `எக்ஸ்`) தேர்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்ïட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி இவற்றில் ஏதேனுமொன்றில் 3 வருட டிப்ளமோவுடன் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வில் கலந்து கொள்வோர் 10 மற்றும் 12 ம் வகுப்பு சான்றிதழ்கள், டிப்ளமோ மதிப்பெண் பட்டியல், தேசிய மாணவர் படை சான்றிதழ் இவற்றின் அசல் மற்றும் 3 நகல்களுடன் இருப்பிட சான்று, சமீபத்தில் எடுக்கப்பட்ட 7 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், விளையாட்டு உடை (டீ சர்ட், ஷூ) ஆகியவற்றுடன் வரவேண்டும்.

விவரங்கள்

மேலும் விவரங்களை www.indianairforce.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே தகுதியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வாசுகி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: